You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
சனாதன தர்மத்தின் ஆணிவேர் நமது வேதங்கள். இயற்கையும், அதை அவ்வாறு தோற்றுவித்த சக்தியுமே கடவுள் என்று ஆதிவேதமான ரிக் வேதம் சொல்லுகின்றது. இயற்கையைச் சார்ந்து எவ்வாறு மனிதன் உடல் மற்றும் மன ஆரோகியத்துடன் இன்பமானதோர் வாழ்க்கையை தன் வாழும் காலத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்பதுவே அந்த தர்மத்தின் குறிக்கோள். இது ஒரு மதம் இல்லை, வாழ்வியல் எனவும் இந்த வாழ்வியல் நமது நாட்டின் ஆணிவேர் எனவும் இந்த தர்மம் என்றென்றும் சாஸ்வதமாக அழியாமல் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்பதுவே உண்மை. இதில் இறை நம்பிக்கை எல்லாவற்றையும் இணைத்து சேர்த்துப் பிடித்து வைக்கும் ஆற்றலுடையது. நமது வாழ்வியல் நமது பலம்.
இந்த “தர்மங்கள் பேசும் சிறுகதைகள்” இரண்டாம் தொகுப்பில் பல தலைப்புகளில் இதைக் குறித்து கதையாச் சொல்லி உங்களுடன் பேச முற்பட முடிந்ததை என் பாக்கியமாக கருதுகின்றேன்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book கோதுலி.