You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
நல்ல கருத்தாழமிக்க கதைகள் எப்போது தோன்றும்? அவை தெய்வ சங்கல்பத்துடனே சாத்தியமாகும். தமிழ்நாட்டில் 40ஆயிரம் கோவில்கள் உள்ளன. விதவிதமான கடவுள் உருவங்கள்! கும்மோணத்துக்கு சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250க்கும் மேல் புராதனமான மிகப் பெரீய கோவில்களை இன்றும் காணலாம். இவற்றில் சிலதை கதைக் களமாக வைத்து அந்த கோவில்களைச் சுற்றி அமைந்த தெருக்களில் வாழும் மனிதர்களின் கதை நிச்சயம் நமக்கு சில பல உண்மைகளை உணர்த்திவிட்டுச் செல்லும் வலிமை மிக்கவை.
இந்தத் தொகுப்பில் பல விதமான கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்படி மனதை (ஆன்மாவை) தொட்டுவிடும் கதைகளாக தேர்ந்தெடுத்து போடப்பட்டிருக்கு.
இதில் நடந்ததாக சொல்லியது உங்கள் வாழ்க்கையிலும் நடந்ததாக பார்க்க முடிந்து விட்டால் அந்தக் கதை உங்கள் மனதிலேயும் இடம்பெற்று மனதை தொட்ட கதையாகப் பரிமளிக்கும். மனதைத் தொட முயலும் கதைகளே ஆன்மீக சிந்தனைகளையும் உங்கள் உள்ளங்களில் தடவி விட்டுப் போகும்.
மனதை தொட்டுவிடும் இக்கதைகளின் தொகுப்பு 4 பாகங்களாக முறையே “முப்பது ரூபாய்க்கு சாமந்தி”, “ஒத்த ரூபா காசு”, “நடைபாதை நியாயங்கள்” மற்றும் “ஓரு சொம்பு தண்ணி” என்ற தலைப்புகளில் கிடைக்கின்றன.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book முப்பது ரூபாய்க்கு சாமந்தி.