You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு, காஞ்சி மாநகர் என்று தொடங்கி அன்றைய களரிக்களத்தையும், மருத்துவமனைகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, தான் எழுதிய சுவடியொன்றை உறவினர்களிடம் அளித்துவிட்டு தன் குரு மாதாவின் கட்டளைக்கு அடிபணிந்து சீன தேசம் சென்று, அங்கு ஒரு கிராமத்தை அம்மை போன்ற கொடிய நோயிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் காப்பாற்றி, அவர்களுக்கு களரியையும் மருத்துவத்தையும் கற்பித்து, அவர்கள் திருப்திக்காக, அவர்கள் கொடுத்த விஷக்களியை உண்டு அந்த இடத்திலேயே உயிர் துறந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதையை போதிதர்மரின் கதையாக தாங்கள் கற்பனை செய்திருந்தால், தயவுகூர்ந்து அந்த எண்ணங்களை தங்கள் மனத்திரையில் இருந்து அகற்றிவிடுங்கள். அது போதிதர்மரின் உண்மைப் பிம்பமல்ல.
புத்த மதத்திற்காக தன் அரச பதவியைத் துறந்து, முற்றிலும் புதியதொரு நாட்டிற்குச் சென்று மதத் தொண்டாற்றி, பல இன்னல்களைச் சந்தித்து, தான் கண்ட ஜென் புத்த மதத்தை நிறுவி அதற்கு அவசியம் எனக் கருதி தான் கற்ற தற்காப்புக் கலையை அவர்களுக்கும் பயிற்றுவித்து தாய்லாந்து, மலேயா, கம்போடியா, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மஹாயான புத்தத்தை தழைக்கச் செய்த ஒரு தமிழன் என கருதப்படும் போதிதர்மனின் உண்மையான முகத்தை இந்நூலில் நாம் தரிசிக்க உள்ளோம்.
ஜீம் பூம் பா என்று சொன்னவுடன் தானாய் நம் கைக்கு வரும் செய்தியல்ல போதி தர்மரின் வரலாறு. நவீன உபகரணங்கள் இன்றி மக்கள் வாழ்ந்த காலத்தைச் சார்ந்த போதிதர்மரை இன்ன இடத்தில், இன்னார்...
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book போதிதர்மர் (Premium Edition).