You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution

Add a Review

குமரிக்கண்டமும், தொல்திராவிடமும், ஆரியமும் / Kumarikkandamum, Tholthiraavidamum, Aariyamum

"தென்னாடுடைய சேயோனே போற்றி!" / " Thennaadudaiya Seyone Potri!”
ம. கிருஷ்ணகுமார் / M.Krishnakumar
Type: Print Book
Genre: Literature & Fiction, History
Language: Tamil
Price: ₹1,399 + shipping
Price: ₹1,399 + shipping
Dispatched in 10-12 business days.
Shipping Time Extra

Description

இப்புவியின் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான காலவெள்ளத்தில் புதைந்தும், அழிந்தும், மறைந்தும் போனவை ஏராளம். அதில், உலகில் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு தோன்றிய தொன்று தொட்ட ஒரு தொல்குடியின் பண்பாடும், வரலாறும், மொழியும் அடக்கம். கால வெள்ளத்தில் புதைந்தும், மறைந்தும் கிடக்கும் அத்தொல் குடியின் தடயங்களைத் தேடும் ஒரு தேடல் பயணம் தான் இந்த ஆய்வு நூல். புவியியல், மொழி, கடவுள் வழிபாடு, கலாச்சாரம், வரலாறு, வாணிகம், வானியல் என பன்முக பரிமாணங்கள் மூலம் குமரிக்கண்டம் என்று கூறப்படும் பண்டைய தொல்திராவிடத்தை சங்க இலக்கியங்கள், தொல்லியல் ஆதாரங்கள், மேற்கத்திய கோட்பாடுகள், மெய்யியல் மற்றும் தர்க்கங்கள் மூலம் தேடி கண்டறிய முற்படும் நூல் இது. தமிழ் மொழியே உலகின் மூத்த மொழியென்றும், சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் எல்லாம் தமிழ் மொழியே என்ற ஆய்வு முடிவையும் முன்வைக்கிறது. பண்டைய மூத்தோர் வழிபாட்டுச் சடங்குகள் எப்படி கடவுள் வழிபாடாகவும், மதங்களாகவும் மாறியது என்பதைக் கூறுகிறது. நாம் வணங்கும் முக்கிய கடவுள்களான தட்சிணாமூர்த்தி, சிவன், நாராயணன், நடராஜர், முருகன் போன்ற கடவுள்கள் யார், அவர்கள் எதைக் குறிக்கின்றனர் மேலும் அவர்களுக்கும் குமரிக்கண்டத்திற்கும் என்ன தொடர்பு என்பதை எதார்த்த விளக்கங்களோடு முன்வைக்கிறது. உலகில் உள்ள பல தொன்மங்களில், கதைகளில் உள்ள ரகசியங்களுக்கு (சிதம்பர ரகசியம் போன்ற) தத்துவ விளக்கங்கள் தாண்டி எதார்த்த விளக்கங்களோடு விடை கூற முற்படும் நூல். இந்த நூல்...

About the Author

முனைவர் ம. கிருஷ்ணகுமார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி என்ற ஊரில் 1972 ம் ஆண்டு பிறந்தவர். துணி பதனிடும் துறையில் பட்டயமும், ஆடை வடிவமைப்பு துறையில் இளநிலை பட்டமும், ஆடை மேலாண்மை துறையில் முதுநிலை பட்டமும், மேலாண்மை துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். 28 ஆண்டுகள் ஆடை தொழில்துறையிலும் மற்றும் கல்லூரி பேராசியராகவும் அனுபவம் பெற்றவர். இந்தோனேசியாவில் சுமார் 7 வருடங்கள் பணிபுரிந்தவர். ஈரோட்டில் 30 வருடங்களாக வசித்து வந்தவர். கேராளவில் கண்ணூரில் உள்ள தேசிய ஆடை புனைவியில் கல்லூரியில் (National Institute of Fashion Technology) பேராசியராகவும், மற்றும் கொல்லத்தில் கேரள ஆடை தொழில்நுட்ப கல்லூரியில் (Institute of Fashion Technology Kerala) முதல்வராகவும் பணியாற்றியவர். தற்போது கேரளாவில் ஒரு மேலாண்மைக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். ஆடை மேலாண்மை துறையில் இரு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ் கவிதை நூல் ஒன்று எழுதி சுயமாக பதிப்பித்துள்ளார். தற்போது கேரளாவில் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

Dr.M.Krishnakumar Ph.D, was born in 1972 at Chinnalapatti, a village in Dindigul District, Tamilnadu. He has his educational qualifications in Diploma in Textiles, Degree in Costume Design and Fashion, MBA, and Ph.D in Management. He has 28 years of professional experience both in industry and academics....

Book Details

ISBN: 9789354164842
Publisher: Self Published
Number of Pages: 985
Dimensions: 7"x9"
Interior Pages: B&W
Binding: Hard Cover (Case Binding)
Availability: In Stock (Print on Demand)

Ratings & Reviews

குமரிக்கண்டமும், தொல்திராவிடமும், ஆரியமும் / Kumarikkandamum, Tholthiraavidamum, Aariyamum

குமரிக்கண்டமும், தொல்திராவிடமும், ஆரியமும் / Kumarikkandamum, Tholthiraavidamum, Aariyamum

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Other Books in Literature & Fiction, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.