You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
நாடோடிப் பாடல்களில் ஈடுபட ஈடுபட அவற்றில் நம் முடைய நாட்டுக்கே உரிய பண்பு எவ்வளவு தெளிவாகப் புலனா கிறது என்பதை உணர்கிறேன். காலந்தோறும் நம்முடைய வாழ்க்கை நிலைகள் மாறுகின்றன; தொடர்புகள் மாறுகின்றன. ஆனாலும், சில அடிப்படையான பண்புகள் மாறுவதில்லை. முன் காலத்தில் நாம் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றவில்லை; விளக்கெண்ணெய் விளக்கை ஏற்றினோம். மின்சார விளக்கு அப்போது இல்லை; ரெயில் இல்லை; மோட்டார் இல்லை; கட்டை வண்டிப் பிரயாணம் நடந்த போது இருந்த அமைதி இப்போது இல்லை. அமைதி யிலே பாட்டுப் பிறக்கும்; புற அமைதியிலே, கவிஞனுடைய அகம் கவி வெறியினால் கொந்தளித்து உணர்ச்சி வசமாகும்; அப்போது கவி மலரும். ஆதலின் கட்டை வண்டிக்காரன் பல பாட்டுக்களைப் பாடினான்; நாடோடியாக வழங்கும் பாடல்களைக் கற்றுக் கொண்டு பாடினான். ரெயில் வண்டி வந்த பிறகு அத்தனை பாட்டு இல்லை; ஆனாலும், ரெயில் வண்டிப் பாட்டும் நாடோடி உலகத்தில் உண்டு.
காலத்தின் மாறுபாட்டால் வந்த ரெயிலுக்கும், மோட்டா ருக்கும், வெள்ளைக்காரனுக்கும், வக்கீலுக்கும் பாட்டுக்கள் இருக் கின்றன. இங்கிலீஷ் வார்த்தைகள்கூட இந்தப் பாட்டுக்களில் ஏறி யிருக்கின்றன. காலேஜ் படிப்பின் அம்சங்களை விரிவாகச் சொல் லும் பெரிய பாட்டு ஒன்று உண்டு. அதற்குக் காலேஜ் ஓடம் என்று பெயர்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மச்சு வீடு.