You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் முக்கியத் தளங்களில் வாசகர்களுடன் உரையாடுகின்றன:சமூகத்தின் விளிம்புநிலை தரிசனங்கள்:தெருவோரச் நான்கு சிறுவன்,அநாதையாகக் கிடக்கும் பிணம், பாலியல் தொழிலாளியின் ஏக்கம் எனச் சமூகம் பார்க்கத் தவறிய அல்லது பார்க்க மறுக்கிற பக்கங்களை இந்தக் கவிதைகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்கின்றன. மாறிவரும் காலத்தின் சாட்சி: 'நாயர் கடை' தேநீரில் தொடங்கும் மழையானது, ஏரிகளையும் நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து 'பேயாக' உருவெடுக்கும் நகரத்து அவலத்தையும்,தொலைந்து போன கிராமத்துத் திண்ணைப் பேச்சுகளையும்,கூகுளில் தேடப்படும் பூர்வீகக் கிராமத்தையும் ஒரு ஏக்கத்துடன் விவரிக்கின்றன. பிழைப்புக்காகப் போராடும் நடுத்தர வர்க்கத்தின் நாட்காட்டிச் சுமைகள் ஸ்மார்ட் வாட்ச் காட்டும் நேரத்திற்கும் மாறாத தலைவிதிக்கும், இடையிலான நகைமுரண் என வாழ்வின் எதார்த்தங்கள் இதில் எளிய சொற்களில் செதுக்கபட்டுள்ளது
இயற்கையும் தத்துவமும்: அரச மரமும் ஆணைமுகனும், காகமும் பரிகாரமும், ஜன்னல் வழி கசியும் ஒளியும் காதலும் எனப் புற உலகப் பொருட்களின் வழியே அக உலகத் தத்துவங்களை இவை மென்மையாகத் தொட்டுச் செல்கின்றன. "தூறல்"-இது ஒரு தனிமனிதனின் சிந்தனைச் சிதறல்கள் மட்டுமல்ல; நாம் அன்றாடம் கடந்து செல்லும், ஆனால் கவனிக்கத் தவறிய ஆயிரக்கணக்கான முகங்களின், உணர்வுகளின் மற்றும் காலத்தின் மௌன சாட்சி.
வாசிப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மெல்லிய ஈரப்பதம் உங்கள் மனதைத் தீண்டுவதை உணர்வீர்கள்.
*****************
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book தூறல்.