You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
எனக்கு என் கண்களில் படும் சிறு சிறு விடயங்களும் மனதில் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருக்கும்.
உதாரணமாக மரம் முழுவதும் இலைகள் இருந்தாலும், அவை அசைந்தாடினாலும் சொல்லாத அழகை அதே மரத்தில் உள்ள எல்லா இலைகளும் அமைதியாய் இருக்க, ஒற்றை இலை மட்டும் அசைந்தாடும் போது அந்த இலை என்னுடன் தன் வாழ்க்கையை சொல்ல ஆசைப்படுவது போல தோன்றும்.
இவ்வாறே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு வயது பதினான்கு இருக்கலாம். அம்மா அப்பாவை சார்ந்து வாழ்ந்த காலமது. அவர்களுக்கு சரியென படுகிற விடயங்கள் எனக்கு தவறாக தோன்றும். அவர்களது பார்வையில் தவறானவை எனக்கு மிகச் சரியாகத் தோன்றும். அவையும் கவிதைகளாக வெள்ளைத் தாள்களை வண்ணங்களாக மாற்றியிருந்ததாக நான் நினைத்துக் கொண்டேன். பெற்றவர்களுக்கு பதினான்கு வயதில் என்ன கவிதை எழுதுவது..அதிலும் பெண் பிள்ளைக்கு இதெல்லாம் எதற்கு என அனைத்தும் கிழித்து தீ வைத்துவிட்டார்கள்.
காக்கையின் நிறம், நிலவு தேய்ந்து அது சொல்லும் சோகம்..குயிலின் குரலோசை..என நான் எழுத முடியாமல் என்னுள் புதைத்து வைத்திருந்தவற்றை எழுத்தாக எழுதினால் அதனை ரசிக்கும் மனநிலை எவருக்கும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு.
அத்தனை ரசனைகளையும் அடக்கம் பண்ணினேன்.
கடமைகள் முடிந்து ஓய்ந்த போது தனிமை எனும் தீவில் மாட்டிக்கொண்ட போது..அத் தீவில் சுற்றியுள்ள அனைத்தும் என்னோடு மனம் விட்டு பேச ஆரம்பித்தன.
மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.சில தொடர்கதைகள் எழுத ஆரம்பித்தேன். திடீரென ஒரு நாள் கடல்புறா படிக்க...
கொன்றைவேலவன் என்ற கற்பனை சரித்திரக் கதை தமிழ் கதைகளென்னும் கிரீடத்தில் மின்னும் வைரக்கல்.
ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பாகப் படிக்கத் தோன்றியது. அழகிய சித்திரம் நம்மிடம் எழுந்து வந்து பேசினால் நம் மனது எப்படித் துள்ளிக் குதிக்குமோ அந்த உணர்வு தோன்றியது.