You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
அறுசுவைக் களஞ்சியம் என்ற தலைப்பு வரிசையில் இது இரண்டாவது புத்தகம். முதல் புத்தகத்தில் இனிப்புச் சுவை தரக்கூடிய பல சமையல் குறிப்புகளைக் கொடுத்திருந்தேன். வாசகர்கள் படித்து, செய்து பார்த்து சுவைத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
அறுசுவைக் களஞ்சியம்ம் வகையில் இந்த இரண்டாவது புத்தகத்தில், தலைப்பில் குறிப்பிட்டது போல் 11 வகை சமையல் குறிப்புகளைக் கொடுத்துள்ளேன். அதன் விவரம் கீழே கொடுத்துள்ளேன்.
1. அடை வகைகள்
2. வடை வகைகள்
3. கார வகைகள்
4. உப்புமா
5. பொங்கல்
6. டிபன் வகைகள்
7. தோசை வகைகள்
8. சட்னி
9. துவையல்கள்
10. குளிர் பானம்
11. சப்ஜி
ஆங்கிலத்தில் “SKC- Sweet, Kaaram, Coffee” என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒரு முக்கியமான நிகழ்வுக்கு ஒரு பாராட்டு அளிப்பதற்கு அவ்வாறு சொல்லுவார்கள். அந்த வகையில் இந்த இரண்டாவது சுவையமுதம் புத்தகம் அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன். முதல் புத்தகத்தில் இனிப்பு அதாவது sweets வகைகளைப் பற்றிப் பார்த்தீர்கள். இந்த புத்தகத்தில் பல கார வகைகளும், தமிழ் நாட்டில் சாதாரணமாக வழக்கத்தில் நிலவி வரும் வார்த்தையான டிபன் (இது ஒரு ஆங்கிலச் சொல்- சரியான தமிழ்ச் சொல் சிற்றுண்டி) வகைகளும், கடைசியில் அருந்தக்கூடிய காப்பிக்குப் பதில், குளிர் பானமும் பற்றி விவரங்கள் கொடுத்துள்ளேன். முக்கியமாக, மார்கழி மாதத்தில் காலையில் கிராமங்களில் பஜனை செய்து கொண்டு எல்லா தெருக்களிலும் சுற்றி வருவார்கள். பஜனை முடிந்ததும் கோவிலிலோ அல்லது தனியாக பஜனை மடம் சென்று அங்கே கடவுளுக்கு பூஜை செய்து பொங்கல் நைவேத்தியம் செய்வார்கள். ஒரே வகையான பொங்கல்தான் தினமும் நிவேதனம் செய்வர்..
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அறுசுவைக் களஞ்சியம்-2.