You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.
அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் (Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.
ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.
முதலில் காலம்தான் (Time) மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
அதாவது, ஒரு மனிதனால் காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக் கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி விட முடியாது.
காலமும், தேசமும் நம் அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.
அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது. அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட முடியாது.
மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை (Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அறிவும் அறியாமையும்.