You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

அறிவும் அறியாமையும் (eBook)

Arivum Ariyamaiyum
Type: e-book
Genre: Religion & Spirituality
Language: Tamil
Price: ₹0
Available Formats: PDF

Description

ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.

அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் (Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.

ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.

முதலில் காலம்தான் (Time) மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதாவது, ஒரு மனிதனால் காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக் கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி விட முடியாது.

காலமும், தேசமும் நம் அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.

அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது. அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட முடியாது.

மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை (Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.

உதாரணமாக, ஒரு குழந்தை தாயின் கற்பத்தில் இருந்து பிறக்கின்ற நேரத்தை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகின்றது. காரணம், அவன், கால, தேசத்துக்குள் வந்து விடுகின்றான் என்பது இவர்கள் கருத்து.

ஒரு குழந்தை உருவாக, முதலில் தந்தையிடமிருந்து வெளிப்பட்ட விந்துவில் இருந்த பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டும் உடல் பெற விரும்பி, தாயின் அண்டத்திற்குள் நுழைகின்றது. இவ்வாறு இது நுழைந்து, அங்கு பிண்டமாக வளர்வதற்கான சக்தியை அவள் உண்ணும் உணவிலிருந்து எடுத்துக் கொண்டு, அந்த தாயின் கற்பத்தில் 10 மாதங்கள் இருக்கின்றவரை, அதன் இருப்பிடம் தாயின் உடல். அங்கு, அந்த உடலுக்கு ஏற்ற வேறு உலகம்.

அதன் பிறகு வயிற்றில் இருந்து ஒரு நாள் முழு உடல் எடுத்து வெளிப்பட்ட பொழுது, 2 அல்லது 3 கிலோ எடைக்கொண்ட ஒரு சிறு குழந்தையாக வெளிப்பட்டது. இங்கு அதற்கு வேறு உலகம். அதாவது, நாம் வசிக்கும் இந்த உலகம். இந்த உலகத்தில்தான் அந்த குழந்தை வெளிப்பட்ட நேரத்தை வைத்து, ஜாதகத்தைக் கணித்து, அந்த குழந்தையின் எதிர்காலத்தை கூறுகின்றார்கள்.

இதுதான் அந்த குழந்தையின் பிறப்பு என்றால், இதற்கு முன்பு தந்தையின் உடலில் இருந்து விந்துவில் வெளிப்பட்ட பிறப்பையும், அந்த சூக்குமமான உடலையும் எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?.

அடுத்து, பரு உடல் எடுத்த பின்புதான் கணக்கு என்று கூறுவதாக இருந்தாலும், அது தாயின் வயிற்றிற்குள்ளேயே உடலை எடுத்துக் கொண்டு, அந்த உலகத்தில் 10 மாதங்கள் வாழ்கின்றதே அதை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது?.

இந்த உலகத்தில் உடல் எடுத்து வந்த பிறகுதான், இந்த உலகத்தின் கால, தேசங்களுக்கு உட்பட்டு, அதற்கேற்றாற் போல அந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்கப்படுகினறது என்றாலும், அந்த நேரமும், காலமும், அந்த குழந்தையின் உடலுக்கா, அல்லது ஆன்மாவிற்கா?

ஆன்மாவிற்கு ஜோதிடம் தேவையில்லை. இடையில் வந்துப் போகும், இந்த உடலுக்கு மட்டும் ஜோதிடம் எழுதுவதினால் என்ன பயன்?

உண்மையில், படைக்கப்பட்ட எதுவும், படைப்பிற்கு முன்பும் இல்லை, படைப்பிற்கு பின்பும் இல்லை. இடையில் சில காலங்கள் இருந்துவிட்டு, பிறகு மீண்டும் இல்லாமல் போகின்றது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அது இருப்பதை வைத்து, அதற்கு ஜோதிடம் கூறுவது என்பது கால, தேசத்தை அறியாதவர்களின் அறியாமை எனலாம்

Book Details

Publisher: Om Graphics
Number of Pages: 73
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

அறிவும் அறியாமையும்

அறிவும் அறியாமையும்

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book அறிவும் அறியாமையும்.

Other Books in Religion & Spirituality

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.