You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.கு.ப. ராஜகோபாலன் மறைந்து சில மாதங்களுக்குப் பின், அவர் சிறிது காலம் ஆசிரியப் பொறுப்பு ஏற்றிருந்த திருச்சி துறையூரிலிருந்து வெளியாகி வந்த 'கிராம ஊழியன் மாதமிருமுறை பத்திரிகையில்' பாரதி அடிச்சுவட்டிலே என்ற தலைப்பில் ஒரு புதிய கவிதையம்சம் வெளிவந்தது தொடர்ந்து.
அதில் 'திங்கள்' என்ற தலைப்பில் 'இளவல்' என்ற புனை பெயரில் வந்த ஒரு கவிதையிலிருந்து சிலவரிகள் இதோ:
திங்களே
நீ வளர்ந்து பூர்ணமுறுகின்றாய்
பின் தேய்வது ஏன்?
ஏக்கமா, கவலையா, காதலா?
துக்கமா, வெறுப்பா, சோர்வா?
இருளைக் கொல்கிறாய் நீ
அந்த இருளே தின்றதோ உன்னை?
மீண்டும் மலர்கிறாய் ஓர் நாள்
அத்தோற்றம் கவர்ச்சி மிக்கது
உமையின் சிரிப்புப் போல.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book அமர வேதனை.